கணவனை கொன்றுவிட்டு வெளியூர் சென்றிருப்பதாக நாடகமாடிய மனைவி.!


கணவனை கொன்றுவிட்டு வெளியூர் சென்றிருப்பதாக நாடகமாடிய மனைவி.!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அடுத்த எஸ்.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென மாயமாகியுள்ளார். இது குறித்து விஜயலட்சுமியிடம் அவரது உறவினர்கள் அடிக்கடி விசாரித்துள்ளனர்.

மேலும் படிக்க | Crime: என் மனைவியை நான் அடிப்பேன், உனக்கென்ன... கள்ளக்காதனுக்கு அரிவாளால் வெட்டு

அதற்கு தனது கணவர் வெளியூர் சென்றிருப்பதாக விஜயலட்சுமி கூறி வந்துள்ளார். நீண்ட நாட்களாகியும், ராஜசேகர் வராததால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமியின் சகோதரர் சிவக்குமார், விஜயலட்சமியிடம் கடுமையாக விசாரித்துள்ளார். அப்போது விஜயலட்சுமி கூறிய தகவல் சிவக்குமாரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

அதாவது விஜயலட்சமிக்கு அதே பகுதியை சேர்ந்த மோகன் என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதற்கு தடையாக இருந்த ராஜசேகரை கொலை செய்து வாழை தொட்டத்தில் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Comments

Popular posts from this blog