மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு




புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரலில், மொத்தவிலை பணவீக்கம், 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது, இதற்கு முந்தைய மாதமான மார்ச்சில் 14.55 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு ஏப்ரலில் 10.74 சதவீதமாகவும் இருந்தது.இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு அடிப்படை உலோகங்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவு தயாரிப்புகள், உணவு அல்லாத பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்தது காரணமாக அமைந்தது.கடந்த 13 மாதங்களாக, மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உள்ளது.

இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாத...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog